30.6.14

கொல்லப்பட்ட நதி


1)

ற்றையடிப் பாதையை
அன்றைக்கு
சாவதானமாய்க் கடந்த
அதே
கருத்த நதி

இன்றைக்கு
விரைந்து விலகுகிறது
என் அரவம் கேட்டு

சருகுகள் கலைய
சலசலத்து.

2)

தலையைச் சிதைத்து
கொல்லப்பட்ட நதியை
வாலைப்பிடித்து
வலம் வருகிறான்
சிறுவன்

அப்போதோ
அது அருவியாய்ப்
பொழிகிறது.

3)

பின்னிப் பிணைந்து
நின்றாடும்
சிறு நதிகள் இரண்டைக்
கண்டேன்

இரண்டற கலவாமலே
விலகிப்போன
நதிகளை கண்டுகொண்டேன்


7.6.14

அப்பாஸ் கவிதை

துப்பாக்கி


துப்பாகி என்றால்
என் மகள் கேட்கிறாள்
சுடுவதற்கு
யாரை
விரோதிகளை
விரோதிகளை என்றால்
உனக்கு பிடிக்காதவற்றைச் செய்பவர்களை
அப்படியென்றால்
எல்லோரையுமா
நானுமா
இல்லை
தேசத்தை அபகரிப்பவர்களை
தேசம் என்றால்
அபகரிப்பவர்கள் என்றால்
திருடர்களை
திருடர்கள் என்றால்
உனது பொருளை
உன் அனுமதியின்றி
எடுத்துச் செல்பவரை
அனுமதி என்றால்
சுதந்திரம்
ஓ அதுதான் துப்பாக்கியா.

- (ஆறாவது பகல் தொகுப்பில்)